பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியத்தில் கெடிலம்

101



“வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.”
"ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.’’

நான்காம் பதிகம்

“வண்டு கொப்பளித்த தீந்தேன்
வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்
கெடில வீரட்டனாரே"

ஏழாம் பதிகம்

“கெடில வேலி அதிகை வீரட்டனாரே"

எட்டாம் பதிகம்

“....பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழியவோடி அதனிடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்டமேய கிளர்சடை முடியனாரே.’’
“கந்திரம் முரலுஞ் சோலைக் கானலங் கெடிலத்தாரே.”

ஒன்பதாம் பதிகம்

“மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத்தே எங்கள் வீரட்டமே”
"பைங்கால் தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுப்பர்
அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவும்
செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடிலக் கரைத்தே’’
"அம்மலர்க் கண்ணியர் அஞ்சனம் செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிரங்கார் தடந்தோள் மெலியக் குடைவார்
விம்மு புனற்கெடிலக் கரைத்தே எந்தை வீரட்டமே.”
“தூய தெண்ணீர்க் கெடிலக்கரைத் திருவீரட்டராவர்”