பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கெடிலக்கரை நாகரிகம்



மறந்தாலும், அதைப் பாடுவதற்கு அவர் நா மறவாது - எழுதுவதற்கு அவர் கை மறவாது. அதனால்தான் ‘தென்திசைக் கெங்கைய தெனப்படும் கெடிலம்’ என்று பாடினார். ‘தென்கங்கை’ என்பதற்குமேல் என்ன சிறப்பு வேண்டும்?

சம்பந்தர் தேவாரம்

திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் திருவதிகைப் பதிகத்தில் இரண்டு இடங்களிலும், திருமாணிகுழிப் பதிகத்தில் இரண்டு இடங்களிலுமாக நான்கு இடங்களில் கெடிலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். முறையே அவை வருமாறு:

திருவதிகைப் பதிகம்

“கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
'வண்டு மருள் பாட..."

“கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்”

திருமாணிகுழிப் பதிகம்

"சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள்
கொண்டு கெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயும்மண மாருதவி
மாணி குழியே"

"உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி
மாணி குழிமேல்."

கெடிலத்தின் நீர் வளமும் அது பாயும் நிலவளமும் சம்பந்தரால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.

சுந்தரர் தேவாரம்

சுந்தரர் பெருமான் தமது தேவாரத்தில் திருவதிகைப் பதிகத்தில் பாடல்தோறுமாகப் பத்து இடங்களில் கெடிலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவற்றுள் சில வருமாறு:

"இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட்டானத்
துறைவானை"

“ஏந்துநீர் எறி கெடிலம்”

எனச் சுந்தரராலும் கெடிலத்தின் நீர்வளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.