இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கெடில நாடு
117
சிறந்தது அந்நாட்டில்தான்; நாடுகளுக்குள் மேம்பட்டது திருமுனைப்பாடி நாடு என்று காவியங்கள் கூறுகின்றன” - என்னும் கருத்தில்,
- [1]"இன்ன நாவலந் தீலனிற் காஞ்சியின் தென்பால்
- பொன்னி நல்வளம் பரப்புநாட் டுத்தரம் பொலிந்து
- தன்னை யொப்பரும் பெண்ணைநீர் பாய்ந்தகந் தழைத்து
- மன்னி வாழ்வது திருமுனைப் பாடிமா நாடு"
- அன்ன நாட்டினில் ஆலால சுந்தரர் உதிப்ப
- என்னையாள் வெண்ணை நாயகர் தடுத்தினி தாண்டார்
- முன்னர் நாவினுக் கரசரு முளைத்திந்தக் கடலின்
- மன்னி யேகரை யேறவிட் டார்புகழ் வளர்த்தார்”
- "நாட்டின் மேம்படுந் திருமுனைப் பாடிநா டென்றே
- ஏட்டின் மன்னிய காப்பியக் கவிகளே யிசைக்கும்..."
என்று புகழ்ந்து பாடியுள்ளார். திருவதிகை வாகீச பக்த நாவலர் தமது திருவதிகைப் புராணத்தில்,
என்றெல்லாம் பல பாடல்களில் பலபடப் புகழ்ந்துள்ளார். இவரும், அப்பரும் சுந்தரரும் பிறந்ததால் பெருமை பெற்ற நாடு எனக் கூறத் தவறவில்லை . இதே பெருமையைச் சிவசிதம்பரப் புலவரும் தமது ‘கரையேறவிட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர். திருமுனைப்பாடி நாட்டிற்கு ‘நடுநாடு’ என்னும் பெயர் உண்மையையும் குறிப்பிட்டுள்ளார். இந் நாடு ‘சீராமன் வழிபட்ட நாடு’ எனவும் புகழ்ந்துள்ளார். பாடற் பகுதிகள் வருமாறு:
- [4]"ஓவு றாப்பெரு வளஞ்செய ஒளிர்நடு நாடாம்
- பாவு சீர்முனைப் பாடிநாட் டணிவளம் பகர்வாம்"