பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

209



பாடல்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய நாலாயிரமாகும். இந்த நாலாயிரத்தில் திருமங்கை யாழ்வாரின் பாடல்கள் 1361 ஆகும். மீதிப் பாடல்களையே மற்றப் பதினொருவரும் பங்கிட்டுக் கொள்கின்றனர். திருமங்கை யாழ்வாரின் பாடல்கள், பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் நூல் தலைப்புக்களின்கீழ் உள்ளன.

நூற்றெட்டுத் திருப்பதிகளுள் நடு நாட்டைச் சேர்ந்தவை திருக்கோவலூர், திருவயிந்திரபுரம் என்னும் இரண்டு மட்டுமே. இவை யிரண்டினையும் திருமங்கை யாழ்வார் பாடியுள்ளார். இப்பாடற் பகுதிகள் பெரிய திருமொழியில் உள்ளன. திருமங்கை மன்னர் அருளிச் செய்துள்ள ‘பெரிய திருமொழி’ என்னும் நூல் பதினொரு பத்துக்களைக் கொண்டது. ஒரு பத்து என்பது நூறு பாடல்கள் கொண்டது; ஒரு பத்து என்பது நூறு பாடல்கள் கொண்டது; அஃதாவது ஒவ்வொரு பத்திலும் பத்து உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வோர் உட்பிரிவிலும் பத்துப் பாடல்கள் உண்டு. ஒவ்வொரு பத்துப் பாடலும் ஒரு ‘திருமொழி’ எனப்படும்; அஃதாவது ஒரு திருமொழி என்பதில் பத்துப் பாடல்கள் இருக்கும். எனவே, பத்துத் திருமொழிகள் கொண்டது ஒரு பத்து; இப்படியாகப் பதினொரு பத்து கொண்டது பெரிய திருமொழி என்னும் நூல். ஆனால், இந்நூலின் பதினோராவது பத்தில் மட்டும் எட்டுத் திருமொழிகளே (80 பாடல்களே) உள்ளன; இறுதி இரண்டு திருமொழிகள் (20 பாடல்கள்) ஆழ்வாரால் பாடப் படவில்லையோ - அல்லது - பாடப்பட்டும் கிடைக்காமல் அழிந்துவிட்டனவோ - தெரியவில்லை.

திருக்கோவலூர்

திருமங்கையாரின் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் ‘மஞ்சாடு’ என்று தொடங்கும் பத்தாம் திருமொழி திருக்கோவலூரைப் பற்றியதாகும். இதில், திருக்கோவலூரின் வளத்தையும் சிறப்பையும் இறைவனின் மாண்பையும் விளக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. பாடற் சுவையின் மாதிரிக்காக முதல் பாடல் வருமாறு:

ஆரபி ராகம் ஆதி தாளம்

"பஞ்சாடு வரையேழுங் கடல்க ளேழும்
வானகமு மண்ணகமு மற்று மெல்லாம்

கெ.14.