218
கெடிலக்கரை நாகரிகம்
சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித் தருள்வாயே
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக் குமரேசா
கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப் புலவோனே
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத் திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே."
முருகன் திருக்கோயில் கொண்டுள்ள பல ஊர்கள் மேலும் அருணகிரிநாதரால் பாடப்பெற்றுள்ள திருப்புகழ் போல, திருமால் எழுந்தருளியுள்ள நூற்றெட்டுத் திருப்பதிகள் பேரிலும் குருவை இராமானுசதாசர் என்பவரால் புகழ்ந்து பாடப் பெற்ற திருப்பாடல்களின் தொகுப்புதான் இந்த நூல். ஆசிரியர் இராமானுசதாசரின் வரலாறு, காலம் முதலியன பற்றி ஒன்றும் புலப்படவில்லை. இந் நூலுள் நடுநாட்டு வைணவத் திருப்பதிகளான திருவயிந்திரபுரம், திருக்கோவலூர் ஆகியவை பற்றிய அழகான திருப்புகழ்கள் இரண்டு உள்ளன. அவை மிகமிக நீளமாயிருப்பதால் ஊரைப்பற்றிய செய்தி அமைந்துள்ள இறுதிப் பகுதிகள் மட்டும் வருமாறு.
திருவயிந்திரபுரம்
- ”...சிறை கறங்களிகள் விளரி பண்கெழுமு
- துழனி பொங்கியெழு கழனி மிஞ்சிலளர்
- திருவ யிந்த்ரபுர மிக விளங்கவரு பெருமாளே.”
- ”...சிறை கறங்களிகள் விளரி பண்கெழுமு
திருக்கோவலூர்
- ”...கோலநீல மேனியாயு பாயமாய நேயதுய
- கோவ லூரில் வாழ்வு மேவு பெருமாளே”.
- ”...கோலநீல மேனியாயு பாயமாய நேயதுய
இந்தநூல் மிகவும் பிற்காலத்ததாய் இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.