பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. கெடில நாட்டுக் கல்வெட்டுகள்

தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்கான ஊர்களில் பதினாயிரக் கணக்கான கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டு பிடித்துப் படியெடுத்துச் சிலவற்றை வரிசை எண்களுடன் அரசினர் வெளியிட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட முடியாமல் அழிந்து சிதைந்துபோன கல்வெட்டுகள் பல அழியாமல் சிதையாமல் இருப்பனவற்றுள்ளும் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவை பல; கண்டுபிடிக்கப்பட்டிருப்பனவற்றுள்ளும் இன்னும் படி எடுக்கப்படாதவை பல படி எடுத்திருப்பனவற்றுள்ளும் இன்னும் அச்சிடப்படாதவை பல படி எடுத்தவற்றுள்ளும் இன்னும் அச்சிடப்படாதவை பத்தோ இருபதோ அல்லது நூறோ இரு நூறோ அல்ல; ஆயிரக் கணக்கானவை இன்னும் அச்சிடப்படவில்லை. எல்லாம் வெளிவந்த்ால் இன்னும் எவ்வளவோ செய்திகள் தெரிந்து கொள்ள முடியுமே!

கல்வெட்டுத்துறையில் தமிழகத்தில் கெடில நாடாகிய நடுநாட்டின் பங்குக்கும் குறைவில்லை. தென்னார்க்காடு மாவட்டத்தில் ஏறக்குறைய முந்நூறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் படி எடுக்கப் பட்டிருக்கின்றன. இம் மாவட்டத்தின் எட்டு வட்டங்களுள், தொண்டை நாட்டைச் சேர்ந்த செஞ்சி வட்டம், சோழ நாட்டைச் சேர்ந்த சிதம்பரம் வட்டம் ஆகியவை நீங்கலாக மற்ற ஆறு வட்டங்களிலும் கல்வெட்டு படி எடுக்கப்பட்ட ஊர்களும் அவற்றிற்கு நேராகக் கல்வெட்டுகளின் எண்களும் வட்ட வாரியாக முறையே வருமாறு:

(110 - 119 என்று எண் கொடுக்கப்பட்டிருந்தால் 110 ஆம் எண்ணுள்ள கல்வெட்டிலிருந்து 119 ஆம் எண்ணுள்ள கல்வெட்டு வரை என்று பொருள் கொள்க.)

கள்ளக்குறிச்சி வட்டம்

கள்ளக்குறிச்சி 280.

ரிஷிவந்தியம் 110 முதல் 119 வரை.

உலகநல்லூர் 166 - 180.

திருவரங்கம் 66; 125 - 134.

கூகையூர் 93 - 124.