458
கெடிலக்கரை நாகரிகம்
எளிய முறையில் உணவு ஆக்குதல்: கஞ்சி எரிய விடுதல், ஏதோ கொதிக்க வைத்தல்.
ஓரளவு நல்ல உணவு : நல்ல கஞ்சி, நல்ல தண்ணி,
மிகவும் நிரம்ப உண்ணுதல்: கொத்துப் பிடித்தல், மூக்கைப் பிடிக்கச் சாப்பிடுதல், மூக்கைக் கிள்ளி வைத்து விட்டுச் சாப்பிடுதல், முழுங்குதல் (விழுங்குதல், குலையை அறுத்தல் - குடலை அறுத்தல் (குடல் அறுபடும்படி உண்ணுதல்), வெள்ளைப் பூண்டுத் திருப்பாட்டம் விழுங்கினான் என்றல்.
மிக்க உணவு : முறஞ்சோறு படி குழம்பு; மலை சோறு சமுத்திரம் குழம்பு.
உயர்ந்த உணவு இடுதல்: பொன்னைப் பொரித்து வெள்ளியை வறுத்துத் தங்கத்தைத் தாளித்துப் போடுதல்.
பெருந்தீனிக்காரன்: வயிறுதாரி, வவுத்தான் (வயிற்றான்), வண்ணான்சாலு.
நிலக்கடலை, வேர்க்கடலை: கடலைக்காய், மணிலாக் கொட்டை, மல்லா கொட்டை (மல்லாட்டை).
பல் உடையும்: பல்லு வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும்.
பல்லை உடைத்து விடுவேன்: பல்லை எண்ணச் செய்துவிடுவேன், முப்பத்திரண்டு பல்லையும் தட்டிக் கையிலே கொடுத்து விடுவேன்.
உதை வேண்டுமா : உடம்பைப் பிடித்துவிட வேண்டுமா? உடம்பு ஒளதடம் கேட்கிறதா?
தூங்குதல் : தட்டிப் போட்டு முடங்குதல், சும்மா கொஞ்ச நேரம் கட்டையை நீட்டிப் போடுதல், கட்டையைக் கீழே போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுத்தல்,
குளித்தல் : உடம்பைக் கழுவுதல், கட்டையைக் கழுவுதல்.
பொறுமையாக : ஆர அமர, அமர, அமரிக்கையா, மெதுவா, மெள்ளமா.
பேதிக்கை சாப்பிடுதல்: மருந்து குடித்தல். (அந்தக் காலத்தில் பேதிக்கை மருந்தைத் தவிர வேறு மருந்து பெரும்பாலான மக்கட்குத் தெரியாது. அதனால், மருந்து குடித்தல் என்றால் பேதி மருந்து சாப்பிடுதலையே குறித்தது.)