மக்களும் வாழ்க்கை முறையும்
469
நிலாக் காலத்தில் பிள்ளைகள் ‘நிழலா? வெய்யிலா?’ ஆட்டம் ஆடுவர். வெய்யில் என்பது நிலா வெளிச்சம். ஒருவனை மற்றவர் ‘நிழலா வெய்யிலா’ எனக் கேட்பர். அவன் வெய்யில் என்று சொன்னால், அவன் நிலா வெளிச்சத்தில் நின்று கொள்வான்; மற்றவர் நிழலில் நின்றுகொண்டு, வெய்யிலில் ஒடி ஒடிப் பின்வருமாறு பாடுவர்:
- "வெய்யிலிலே நிக்கிறியே வெக்கங் கெட்டநாயே
- வெய்யிலிலே நிக்கிறியே வெக்கங் கெட்டநாயே ::வெய்யிலிலே வந்தேனே வெக்க மில்லையோ
- வெய்யிலிலே வந்தேனே வெக்க மில்லையோ’’
வெய்யிலில் வருபவர்களை வெய்யிலில் நிற்பவன் ஒடித் துரத்திப் பிடிப்பான். ஒருவன் நிழல்கேட்டு நிழலில் நின்று கொண்டால் மற்றவர் வெய்யிலில் நின்று நிழலுக்கு ஒடி ஒடிப் பின்வருமாறு பாடுவர்:
- “நிழலிலே நிக்கிறியே நிலைகெட்டநாயே
- நிழலிலே நிக்கிறியே நிலைகெட்டநாயே
- நிழலுக்கு வந்தேனே வெட்கமில்லையோ
- நிழலுக்கு வந்தேனே வெக்கமில்லையோ.”
4. கோலி விளையாட்டு பாடல்
சிறுவர் கோலிகுண்டு விளையாடும்போது ஒன்றிலிருந்து பத்துவரையும் எண்ணிக் கூறும் எண்பாடல் வருமாறு:
1. ஒக்காச்சி கொக்கு
2. இரட்டைப் பருந்து (அல்லது)
- இரட்டைப் பிரம்பு
3. மூக்கிலே சொள்ளை (அல்லது)
- மூக்கு சொளாங்கி
4. நாக்கிலே நந்தம்
5. ஐயப்பன் சொள்ளை (அல்லது)
- ஐயப்பன் சோலை
6. அறுமுக தாளம்
7. எழுமா லிங்கம் (அல்லது)
- எழுவா லிங்கம்