பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472

கெடிலக்கரை நாகரிகம்



கறுப்புக் காளை வருகுது பார்
சூரியனுக்கு வட்டக் காளை
சொல்லிச் சொல்லி அடிக்குது பார்
அடிக்குது பார் அடிக்குது பார்."

10

"சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சிக்சிக் தாரா கிளிமூக்கு தாரா
சிக்சிக் தாரா கிளிமூக்கு தாரா
கிண்டலா செய்யற கிண்டலா செய்யற
சடுகுடு சடுகுடு குடுகுடு குடுகுடு."

11

6. ஏழாங்காய்ப் பாடல்

இளம் பெண்கள் ஏழுகாய்கள் வைத்துக்கொண்டு உயரே தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடும் ஒருவகையாட்டம் இந்தப் பகுதியில் உண்டு. இதற்கு ‘ஏழாங்காய் விளையாட்டு’ என்பது பெயர். ‘காய் சுங்குதல்’ என்றும் இதனைச் சொல்வதுண்டு. பெண்கள் கூடிப் பாடிக்கொண்டே விளையாடும் இதுபோன்றதொரு விளையாட்டு இலக்கியங்களில் ‘அம்மானை’ என்று சொல்லப்படுகிறது. ஏழாங்காய் விளையாட்டில், ஒரு காயை மேலே தூக்கிப் போட்டுக் கீழே முதலில் ஒவ்வொரு காயாகவும், பின் இரண்டிரண்டு காய்களாகவும், பின் மூன்று மூன்று காய்களாகவும் பின் இன்னும் பல்வேறு வகையாகவும் எடுத்துக்கொண்டு மேலிருந்து கீழ்நோக்கி வரும் காயையும் பிடித்துக் கொள்வர். ஒவ்வொரு காயாக எடுக்கும்போது ஒவ்வோர் எண்ணிற்கும் ஏற்ற பாட்டுப் பாடுவர். மற்றும் பல்வேறு வகையாகக் காய் எடுக்கும்போதும் அந்தந்தக் காய்களின் அளவிற்கேற்பப் பாடுவர். இந்தக் காய் எண் பாடல்கள் பலவிடங்களில் பலவிதமாகப் பாடப்படுகின்றன; இருப்பினும், பாடல்கள் யாவும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஒத்துள்ளன; சில பகுதிகளில் மட்டும் சிறுசிறு வேற்றுமைகள் உள்ளன. இனிப் பாடல் வகைகள் வருமாறு:

"பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணிக்கு
தண்ணி கரையிலே தகுந்த மனையிலே
பூமாதேவி அம்மா பிள்ளை வரம்கேட்கிறாள்.

ஈரியோ ராகவா என்தம்பி கேசவா
மாட்டை மடக்குடா மாதவா.

முக்கோட்டிலே என்னைப் பெத்து
கப்பலிலே தாலாட்டி