பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

477



பக்காவே பக்காவே பாலடை விற்குது
எந்தத் தெருவிலே சந்தைத் தெருவிலே
வாங்கப் பணமில்லை வரிசை வைக்கத் தட்டில்லே."

5

"பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணிக்கு
தண்ணி குடத்திலே தவழ்ந்த மலையிலே
பூமா தேவியம்மா பிள்ளைவரம் கேட்டாளாம்.

ஈரோன் ரெண்டு மாதா மணிக்கூண்டு
மல்லிகைப் பூச் செண்டு
முக்கோட்டு சிக்கோட்டு மூன்றாம் படிக்கட்டு
ஏழைக் கண்ணாட்டி தூது விளையாட்டி
துலுக்கன் பெண்டாட்டி.

கீழ்க்காணி மேல்காணி கீழே சுரக்கானி
கன்றுள கறப்பான் கறந்ததைக் குடிப்பான்
தேனிலே செல்லம் செல்வக் குமாரன்.

பக்கா பக்கா லேலிலோ பறங்கி பக்கா லேலிலோ
குண்டு பக்கா லேலிலோ குடுகுடுத்தா லேலிலோ
வாங்கித் தின்னா லேலிலோ வச்சிப் படைக்கிற லேலிலோ

அஞ்சு களாக்கா தும்பைப்பூ
அதுமேலே வாராள் ராசாத்தி
ஐவால் ரேக்கு பம்பாய் சிலுக்கு.

ஐவர் அரைக்கும் மஞ்சள்
தேவர் குளிக்கும் மஞ்சள்.

ஆக்கூரு சீக்கூரு அறிந்த களிக்கூரு
ஆக்கூரு மச்சான் பாக்கு வச்சான்
அதிலே ரெண்டு பணத்தை வச்சான்.
ஏழைப் பெண்ணு இடையப் பெண்ணு
மோரு விக்கிற மொட்டைப் பெண்ணு
மூத்தாரைக் கண்டால் பேசாளே."


பொறுக்கி சிறுகுருவி பொங்கும் மனக்குருவி
தந்தம் தனக்குருவி தாயில்லாப் பேய்க்குருவி
பேய்க்குருவி வாசலிலே பெண்பிறந்தால் ஆகாதோ.