பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

481



‘குதிக்காதடி பெண்ணே நிலைக்கா திந்த வாழ்வு
மாணிக்கமே குட்டி சாணிக்காடி நீ போறே’

‘அம்புபோன வேகம் தம்பிபோனான் காணாம்
அம்புக் கேத்த வில்லு தம்பிக் கேத்த பெண்ணு’

‘ஏத்தக் காரஐயா எந்தப் பெண்ணுவேனும்
நாலு பேரு போறாள் நடுவிலே இருக்கிறவ வேணும்’

‘முண்டக் கண்ணு குட்டி சண்டை போடகெட்டி
முண்டன் கிட்டே சொன்னேன் சண்டை வேண்டா மென்று
நட்டுக் கிச்சாம் ஏத்தம் குட்டி பண்ண மோசம்’

‘மாவு இடியேன் பெண்ணே மயிலத்துக்குப் போவோம்
மாவிடிக்க வில்லை மயிலத்துக்கு வல்லே
பூமுடியேன் பெண்ணே புதுச்சேரிக்குப் போவோம்
பூமுடிக்க வில்லை புதுச்சேரிக்கு வல்லே.’

8. நடவுப் பாட்டு

உழவர்கள் வயலில் நடவு செய்யும்போது பாடும் சில பாட்டுகள் வரமாறு:

"வள்ளி வள்ளி கொடி நடுவாய்
கிள்ளி வந்து கிழங் கெடுத்து
குழிதனில் நடுவ தென்ன
மானெடுத்து நடுவ தென்ன
மஞ்சம் குரல் கேட்ட தென்ன
பூனை ஓடி நடுவ தென்ன
புள்ள குரல் கேட்ட தென்ன

வெள்ளானை உழுதுவர வேடமக்கள் புல்பிராய
கருப்பானை உழுதுவர கள்ளமக்கள் புல்பிராய
சிவப்பானை உழுதுவர சேடமக்கள் புல்பிராய
சிவப்பு நாயும் சங்கிலியும் சேடருட கூட்டினங்கள்
கருப்பு நாயும் சங்கிலியும் கள்ளருட கூட்டினங்கள்

காடு வெட்டிக் கல்பொறுக்கிக்
கம்பு சோளம் தினை விரைக்க