பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

483



கல்லு உருண்டு வர ஏலேலம்படி ஏலம்
காடு வெட்டிக் கல்பொறுக்கி ஏலேலம்படி ஏலம்
கம்பு சோளம் தினைவிரைச்சி ஏலேலம்படி ஏலம்
மோடு வெட்டி முள்பொறுக்கி ஏலேலம்படி ஏலம்
முத்து சோளம் தினைவிரைச்சி ஏலேலம்படி ஏலம்
வெள்ளானை உழுதுவர ஏலேலம்படி ஏலம்
வேட ரெல்லாம் புல்பிராய ஏலேலம்படி ஏலம்
கருப்பானை உழுதுவர ஏலேலம்படி ஏலம்
கள்ள ரெல்லாம் புல்பிராய ஏலேலம்படி ஏலம்
அள்ளி விரைச்ச தினை ஏலேலம்படி ஏலம்
அள்ளித் தின்ன மாளலியே ஏலேலம்படி ஏலம்
பிடிச்சு விரைச்ச தினை ஏலேலம்படி ஏலம்
பிடிச்சுத் தின்ன மாளலியே ஏலேலம்படி ஏலம்
வீசித் தின்ன மாளலியே ஏலேலம்படி ஏலம்
கொட்டி விரைச்ச தினை ஏலேலம்படி ஏலம்
கூடித் தின்ன மாண்டுதம்மா ஏலேலம்படி ஏலம்."

2

9. நெல் குத்துவோர் பாடல்

நெல் குத்திக்கொண்டே மாமியாரும் மருமகளும் மாறிமாறிப் பாடுவதுபோல் பெண்டிர் இருவர் பாடும் பாடல்:

"மூச்சு பிடிச்சி போடடிகுட்டி
முத்துமணி குத்தி சோறாக்கணும்
ஆச்சுதா அத்தே சாயங்காலம்
அள்ளிக்கோ இந்தா அரிசிமணி
மச்சான் வருவான் போடடிகுட்டி
மாளலியா இன்னும் நெல்லுகுத்தி
மாமியாரே அத்தே மஞ்சிபோச்சி
மச்சான் வரட்டும் மிஞ்சிபோச்சி
பொழுது போகுது போடடிபுள்ளே
பொன்னுமணி குத்தி பொங்கிடணும்
பொழுதும் பூட்டுதா அத்தையாரே
புடைச்சிதரேன் இந்தா புட்டரிசி
குழந்தை தூங்கிடும் குத்தடிசெல்லீ
கூட்டுகறி சோறு ஆக்கிடணும்
குழந்தைக்குப் பால்கொடுக்கணும் அத்தே
குத்திவிட்டேன் இந்தா முத்தரிசி."