பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496

கெடிலக்கரை நாகரிகம்




கட்டடம் - சிற்பம்

கட்டடக் கலையும் சிற்பக் கலையும் பெற்றிருந்த வளர்ச்சிக்கு, இப் பகுதியிலுள்ள கோயில் கட்டடங்களும் கோபுரங்களும் கோயில்களிலுள்ள சிற்பங்களும் சிலைகளும் சான்று பகரும். சிறப்பாக, மண்டகப்பட்டுக் குகைக்கோயில் திருக்கோவலூர்ப் பெருமாள் கோயில் மண்டபம், ரிஷி வந்தியம் கோயிலில் கருங்கல் யாளியின் திறந்த வாய்க்குள் உருளும் கல் உருண்டை,வேங்கடம் பேட்டையிலுள்ள மண்டபங்கள்,