பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி-கலைத்துறை

497


சேந்தமங்கலம் கோட்டைக்கோயில், திருவதிகைக் கோயிலின் கருவறை விமானம், திருநாவலூரிலுள்ள சுந்தரர், பரவையார், சங்கிலியார், நரசிங்கமுனையரையர் ஆகியோரின் உலோகச் சிலைகள், திருப்பாதிரிப் புலியூரில் ஆஞ்சநேயர் கோயிலிலுள்ள ஆஞ்சநேயரின் கருங்கற்சிலை முதலியவை மிகவும் குறிப்பிடத்தக்கன. மாதிரிக்காக, நரசிங்க முனையரையரின் உருவச்சிலையின் படமும், திருவதிகைக்கோயில் கருவறை விமானப்படமும் மேலே காட்டப்டபெற்றுள்ளன.

இந்த உலோகச்சிலை நரசிங்க முனையரையர் என்னும் அரசர்க்கு உரிய எல்லாவகையான ஒப்பனைகளும் அமையப் பெற்று மிகவும் பொலிவுடன் திகழ்வதைக் காணலாம். திருநாவலூர்க் கோயிலிலுள்ள சுந்தரர், பரவையார், சங்கிலியார் ஆகிய மூவரின் உலோகச் சிலைகள் மிக மிகப் பொலிவுடன் விளங்குகின்றன. சுந்தரர் என்றால் சுந்தரரே தான் (அழகரே தான்).

இந்த விமானம் பற்றிய செய்திகளை இந்நூலில் ‘கெடிலக்கரை ஊர்கள் - திருவதிகை’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம். இது பல்லவர் கால வேலைப் பாடுடையது. இதன் அடிப்பகுதி கருங்கல்லாலானது; அக்கருங்கல் நிலையின் மேல் தேர் போன்ற தோற்றத்தில் விமானம் செங்கல்லாலும் சுதையாலும் அமைக்கப்பட்டிருக்கிறது. விமானத்தைச் சுற்றிலும்

கெ.32