பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அதற்காகக் காய்களே தள்ளுவதோ-கலப்பதோ போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.

வெற்றிதான் போட்டி ஆட்டத்தின் நோக்கம் என்ருலும்,

அதற்காக குறுகிய புத்தியுடன் குறுக்கு வழிகளைக் கையாள முயல்வது அறிவுடமை ஆகாது.

"தனது நேர்மையை சோதித்துக் கொள்ள விளையாடு மிடமே சரியான இடம் என்பது பெரியோர்களின் கருத்

தாகும்.

உரிய திறமையை உயர்ந்த முறையில் பயன்படுத்தி, அதற்காக உன்னத வழிகளைப் பின்பற்றி ஆடுவோரே, வாழ்க்கையில் பேரும் புகழும் பெறுகின்றனர் என்பது சரித்திரம் காட்டும் சான்ருகும்.

எனவே, பண்புடனும், பாச உணர்வுடனும் தமது ஆற்றலை வெளிப்படுத்தும் வண்ணம், ஆட்டத்தின் விதி முறைகளைக் காத்து, விழுமிய முறையில் விளையாடி மகிழ்க !

நலம் சூடித் திகழ்க !