இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
111
சீதாராமன் : அமெரிக்கா, ஆஸ்திரேலியா.
சூடாமணி : தவறு. அது ஒரே ஒரு கண்டத்தில் தான்...வாழ்கிறது. அது ஆப்பிரிக்காதான். நம் தேசத்தில் அதிகமான அளவில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் எது?
ராஜேஸ்வரி : நெய்வேலி.
சூடாமணி : சரியான விடை. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில்தான் அதிகமான பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. எல்லா மிருகங்களுக்கும் குரல் உண்டு, ஒரே ஒரு மிருகத்தைத் தவிர. அது எந்த மிருகம்?
குமார் : ஒட்டகச்சிவிங்கி.
சூடாமணி : அடடே, குமார் சரியாகச் சொல்லி விட்டானே!...முதல் முதலாக உங்களுக்காகத் தமிழில் வெளி வந்த வாரப் பத்திரிகை எது? அதை நடத்தியவர் யார்?
சுப்பிரமணியம் : அணில்'. அதை நடத்தியவர். தமிழ்வாணன்.