இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120
பத்மா : சரியாகச் சொன்னாய். அமெரிக்கா விடுதலை பெற்று 1776-லிருந்து 1800-ஆம் ஆண்டு வரை நியூயார்க்தான் தலைநகரமாக இருந்தது. தரைப்படை கடற்படை, விமானப் படை ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனியாக ஒரு கொடி உண்டு. இதோ இங்குள்ள கொடி நம் தேசத்தின் எந்தப் படைக்கு உரிய கொடி என்று தெரியுமா?
(படம்)
வரத : கப்பற்படைக் கொடி.
பத்மா: தவறு.
பமீலா: தரைப்படைக் கொடி.
பத்மா : சரிதான். இருந்தாலும், மூன்றிலே ஒன்றைச் சொல்லியாயிற்று. மீதமுள்ள இரண்டிலே ஒன்றைச் சொல்லி வைப்போமே என்று சொல்லக்கூடாது. போகட்டும். மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தர் என்னும் ஊர் எந்த மாநிலத்தில் இருக்கிறது?
வரத : குஜராத்தில்.