இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
127
காகிதத்தைக் கண்டால்
கண்ணிர் விடுவான்.
முக்காடு போட்டால்
சொக்காயில் தொங்குவான்.
பமீலா ; பேனா. பத்மா : என்ன பேனா? கட்டைப் பேனாவா?
பமீலா : இல்லை; பவுண்டன் பேனா.
பத்மா : சரி, சென்னைத் துறைமுகத்தில் வேலை பார்த்த ஒருவர், உலகம் போற்றும் கணிதை மேதையாக விளங்குகிறார்......
வரத : நான் சொல்கிறேன். கணிதை மேதை இராமானுஜம்.
பத்மா: கரெக்ட் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை வயதானவர் வாக்கு அளிக்கலாம்: எத்தனை வயதானவர் வேட்பாளராக நிற்கலாம்?