இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33
பிரின்ஸ்: ராஜாஜிக்கு
சரளா : அவர் ஒருவருக்குத்தானா? இன்னும் இருவருக்கும் வழங்கப்பட்டதே, அவர்களின் பெயர்கள் தெரியுமா?
கிரி : டாக்டர் ராதாகிருஷ்ணன்.
சரளா : அதுவும் சரி, இன்னொருவர் நோபல் பரிசு பெற்றவர்...என்ன, இன்னுமா தெரிய வில்லை?
பிரிதி : தெரியும், தெரியும். சர்.சி.வி. ராமன்.
சரளா ! எப்படியோ மூன்று பேரும் ஆளுக்கு, ஒரு தலைவர் பெயரைச் சொல்லிவிட்டீர்கள். இந்தியாவிலே முதன் முதலாகத் தயாரிக்கப் பட்ட செயற்கைக் கிரகம் எது?
பிரின்ஸ் : ஆரியபட்டா.
சரளா கரெக்ட். இலங்கையிலே ஒர் ஆறு. இருக்கிறது. அது கங்கை என்ற பெயருடன் முடியும். அதன் முழுப் பெயர் தெரியுமா?