36
அவர்களில் ஒருவர் பெயர் சுகதேவ், மற்றொருவர் பெயர் ராஜகுரு. நம் உடம்பின் எடையிலே எத்தனை சதவிகிதம் இரத்தம் இருக்கிறது? சொல்ல முடியுமா?
கிரி : 12-ல் ஒரு பங்கு
சரளா : நான் சதவிகிதத்தில் கேட்டேன். பரவாயில்லை. உடம்பின் எடையில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் இரத்தம் இருக்கிறது...விதை யில்லாப் பழங்கள் என்னென்ன?
பிரிதி : வாழைப்பழம்.
சரளா: சரிதான் சிலவகை திராட்சை, கிச்சிலியிலும் விதை இருப்பதில்லை. இப்போது நான் ஒரு பாட்டின் ஆரம்பத்தில் உள்ள இரண்டு வரிகளைச் சொல்கிறேன். உடனே பாட்டை எழுதியவர் யார் என்று சொல்லிவிட வேண்டும். எங்கே பார்க்கலாம்?
கொல்லையிலே கொய்யாப்பூ-அது
கொண்டையிலே வையாப்பூ.
பிரின்ஸ் : கவிஞர் கண்ணதாசன், சரளா இல்லை.
கிரி : பாரதிதாசன்.
சரளா: சரியாக விடை சொன்னாய்... செவ்விந்தியர்கள் என்கிறார்களே, அவர்களுக்கும் இந்தியர்களாகிய நமக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?