51
மீனைப் போல் இருக்காது. முகம் குதிரையைப் போல் இருக்கும். நிமிர்ந்து நின்றபடி நீங்தும்.
இப்போது ஒரு கவிஞரைப் பற்றிக் கேட்கப் போகிறேன். முத்துப் பாடல்கள் என்று உங்களுக்காகவே வெளிவந்துள்ள புத்தகத்தை எழுதியவர் யார்?
முத்து: பெ. துரன்.
சிவம் : இல்லை.
ஜோதி : தேசிகவிநாயகம் பிள்ளை.
சிவம் : அவரும் இல்லை.
தங்கம் : மயிலை சிவமுத்து.
சிவம் : மிகவும் சரி. மாணவர் மன்றம்' என்ற மிகவும் புகழ்பெற்ற மன்றத்தை ஏற்படுத்தி அதன் தலைவராகவும் இருந்தவர் அவர். உங்களுக்காகவே வாழ்ந்த ஒரு பெரியவர். Chess என்று சொல்லுகிறோமே சதுரங்கம், அது எந்த நாட்டில் முதலில் தோன்றியது?
முத்து : நம் நாட்டில்தான்.
சிவம் : கரெக்ட். கி. பி. 6ஆம் நூற்றாண்டில் நம் இந்தியாவில் தோன்றி அது பாரசீகத்திற்குப் போனது. அங்கிருந்து பல நாடு களுக்கும் பரவி, இப்போது உலக ஆட்டம் ஆகிவிட்டது. சந்திர மண்டலத்தைப் பற்றி