91
சரவணன்: ஓ, நன்றாகத் தெரிகிறதே, இதுதான் விசைக் காற்றாடி.
ஜெயா : ஐயையோ விசைக் காற்றாடி இப்படியா இருக்கும்? காற்றாடியிலே நீளநீளத் தகடு இருக்குமே!
கிரி : இது. ராடார் கருவி.
அலமேலு : கரெக்ட். ஒரு பொருளின் இருப்பிடத்தையும் தூரத்தையும், ரேடியோ அலைகளைக்கொண்டு அறிவதற்குப் பயன்படும் ராடார் கருவிதான் இது. முன்பெல்லாம் கோயில் கட்டடங்கள் செங்கற்களாலே கட்டப்பட்டிருக்கும். பிறகுதான் கருங்கற்களைக் கொண்டு கட்டினார்கள். முதல் முதலாகக் கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில் எது, தெரியுமா?
சரவணன் : அந்தக் கோயில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. ஏகாம்பரநாதர் என்று நினைக்கிறேன்.
அலமேலு : காஞ்சிபுரம் என்பது சரியே. ஆனால். ஏகாம்பரநாதர் கோயில் என்பது தவறு.
ஜெயா: கைலாசநாதர் கோயில்.
அலமேலு: ஆம், கைலாசநாதர் கோயில்தான் முதன் முதலாக அமைக்கப்பட்ட கற்றளிக் கோயில். இந்திய அரசு அளிக்கின்ற விருது