30
போது, அந்தக் கிளர்ச்சியிலே ஈடுபட ஒருவரும் முன்வர வில்லை என்ற நிலை ஏற்படும்போது.
இங்கு நாம் கண்டது என்ன? கிளர்ச்சியின் துவக்கம் தொட்டிலில் இருக்கும்போதே, 2000-கழகத் தோழர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட விந்தையை! இந்தத் திருவிளையாடலையும் செய்துவிட்டு, தி. மு. க. கிளர்ச்சிக்கு ஆதரவே இல்லை, அனுதாபமே இல்லை, கிளர்ச்சி நடக்கவே இல்லை! என்று வேறு திருவாய் மலர்ந்தருளுகிறார்கள்!!
மூலைக்குமூலை மிரண்டோடி 2000 -பேர்களைச் சிறையிலே போட்டு அடைத்துவிட்டது மட்டுமா! சிறையிலே அவர்களைப் போட்டுவிட்டு, காமராஜர் ஊரூருக்கும் சென்று, கழகத்தவர்களை,
கோழைகள்
சூதாடிகள்
நாடோடிகள்
என்றெல்லாம் அர்ச்சிக்கும் கைங்கரியத்தையும் வேகமாக நடத்தக் காண்கிறோம் (பத்திரிகைகளில் பார்த்தேன்). கணவனை, மகனை, அப்பனை. அண்ணன் தம்பியை, மைத்துனன் மாமனை, உறவினனை, சிறையில் தள்ளி விட்டார்களே என்று வயிறு எரிந்துகிடக்கும் தாய்மார்கள் காதுக்கு இவர் பேச்சு நாராசமாகத்தான் இருந்திருக்கும். இப்படியும் ஈவு இரக்கமற்ற ஒரு சுபாவமா! என்று கேட்டுக் கண்ணீர் சிந்தியிருப்பார்கள். ஆனால், இது ஜனநாயகக் காலம். ஆகவே அவர் இந்த அளவோடு இருக்கிறார். நாக்கை அறு! கை கட்டை விரலை வெட்டு! உயிரோடு போட்டுப் புதைத்துவிடு! என்றெல்லாம் ஆதிக்கக்காரர்கள் ஆர்ப்பரித்த காலம் ஒன்று இருந்தது. மகனைக் குத்திக் கொல்லச்செய்து, அந்தக் கோரத்தைத் தாய்க்குக் காட்டுவது! குழந்தையைத் தூக்கி எறிந்து சாகடித்து, அதைக் கண்டு பெற்றவள் மாரடித்து அழுவதைக் காண்பது! இப்படிப்பட்ட காட்டுமிராண்டி முறைகள் இருந்தன! இப்போது ஜனநாயகக் காலமாக இருப்பதால் சிறையிலும் தள்ளிவிட்டு, சீரழிவாகவும் ஏசிப் பேசுவதோடு இருந்துவிடுகிறார்கள்.