பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98




“நும்மூரிக்கு
நீதுணை யாகலு முளையே, நோதக
முன்னவை வருஉங் காலை நும்முன்
நுமக்குத்துணை யாகலும் உரியன்; அதனால்
தொடங்க வுரிய வினை பெரி தாயினும்
அடங்கல் வேண்டுமதி.””

இச் செய்யுளில் நீ என்பது குட்டுவன் இரும்பொறை யையும் 'நும்மூன்' என்பது இவன் தமையனான பெருஞ்சேரல் இரும்பொறையையும் குறிக்கின்றன. குட்டுவன் இரும்பொறையின் வரலாறு ஒன்றுந் தெரியவில்லை. தகடூர்ப் போர் நடந்தபோது இருந்த இவன், அப்போரிலோ அல்லது வேறு போரிலோ இறந்திருக்க வேண்டும். இவனைப் பற்றிய செய்யுள் ஒன்றும் தொகை நூல்களில் காணப்படவில்லை. இவனுடைய மகன் இளஞ்சேரல் இரும்பொறை பதிற்றுப்பத்து 9-ஆம் பத்தில் தலைவன் என்பதை யறிந்தோம்.

கொங்கு நாட்டை அரசாண்ட இவர்கள் காலத்தில் (பெருஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை) சேர" நாட்டை அரசாண்டவன் சேரன் செங்குட்டுவன். அவனுக்குக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் என்றும் பெயர் உண்டு. பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை வென்ற பிறகு நீண்டகாலம் அரசாளவில்லை. அவன் ஏதோ ஒரு போரில் இறந்து போனான் எனத் தோன்றுகிறது. அவன் அரசாண்ட காலம் 17 ஆண்டுகள். அவனுக்கு முன்னமே அவன் தம்பியான குட்டுவன் இரும்பொறை இறந்து போனான். பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பிறகு அரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறையும் 16 ஆண்டுதான் அரசாண்டான். இவர்கள் இருவருடைய ஆட்சிக் காலம் 33 ஆண்டுகளேயாகும். சேரன் செங்குட்டுவனோ 55 ஆண்டு அரசாண்டான் என்று 5-ஆம் பத்துப் பதிகக் குறிப்பு கூறுகிறது. ஆகவே இவ்விரு கொங்கு நாட்டரசரும் சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலேயே இறந்து போனார்கள். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழா எடுப்