பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பொறை யரசர்களின்
கால நிர்ணயம்

இனி, கொங்கு நாட்டைக் கடைச் சங்க காலத்தில் அரசாண்ட சேரமன்னர்களின் காலத்தை நிர்ணயிக்க வேண்டியது கடமையாகும். (காலத்தைக் கூறாத சரித்திரம் சரித்திரம் ஆகாது.) இந்த அரசர்களில் மூன்றுபேர் (7, 8, 9 ஆம் பத்து) ஒவ்வொருவரும் இத்தனையாண்டு அரசாண்டனர் என்பதைப் பதிற்றுப் பத்துப் பதிகக் குறிப்புகள் கூறுகின்றன. 7-ஆம் பத்தின் தலைவனான செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டும், இவன் மகன் 8-ஆம் பத்துத் தலைவனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17-ஆண்டும், இவனுடைய தம்பி மகன் 9-ஆம் பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை 16-ஆண்டும் அரசாண்டனர் என்று அந்தக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், இவர்களுக்கு முன்னும் பின்னும் அரசாண்டவர் ஒவ்வொருவரும் எத்தனையாண்டு அரசாண்டனர் என்பது தெரியவில்லை. கிடைத்துள்ள குறிப்புகளைக் கொண்டு இவர்களின் காலத்தை ஒருவாறு நிர்ணயிக்கலாம்.

இந்தக் கால நிர்ணயத்திற்கு அடிப்படையான கருவியாக இருப்பது செங்குட்டுவன்-கஜபாகு சமகாலம் ஆகும். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழா செய்தபோது, அவ்விழாவுக்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை யரசனான கஜபாகுவும் (முதலாம்