227
அது மக்கள்' என்னும் பொருளுடைய சொல் என்று கருது கிறார். மகன் என்பதே சரியான வாசகம்.
கடைசியாக உள்ள ஏழு எழுத்துக்கள் 'கீரன் கொற்றன்' என்று முடிகின்றன. இவற்றை மகாலிங்கமும், மகாதேவனும் சரியாகவே வாசித்திருக்கிறார்கள். ஆனால், மகாதேவன் கீரன் கொற்றன் என்று இரண்டு பெயரைக் குறிக்கின்றன இவை என்று கருதுகிறார். இது தவறு என்று தெரிகிறது. பிட்டந் தையாகிய பிட்டனுக்குக் கொற்றன் என்றும் பெயர் உண்டு என்பதைச் சங்கச் செய்யுள்களிலிருந்து அறிந்தோம். பிட்டங் கொற்றன் என்னும் பெயரை எடுத்துக் காட்டினோம். அது போலவே அவன் மகனான கீரனும் கொற்றன் என்று இதில் கூறப்படுகிறான். ஆகவே கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளைக் குறிக்கிறது.
பிடந்தை மகன் கீரன் கொற்றன் நள்ளியூரில் இருந்தான் என்பதும் அவன் புகழூர் மலைக்குகையில் கற்படுக்கைகளை முனிவர்களுக்காக அமைத்துக் கொடுத்தான் என்பதும் இந்தக் கல்வெட்டெழுத்துக்களினால் அறியப்படுகின்றன. நள்ளியூர் என்று எழுதப்படவேண்டிய சொல் நள்ளிவ்ஊர் என்று வகர ஒற்று சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே இதை நள்ளியூர் என்று திருத்திப் படிக்க வேண்டும்.
***
புகழூரில் இன்னொரு சாசனம் மேலே சொன்ன சாசனத் தோடு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இது, சாசன எழுத்து இலாகாவின் 1983-84ஆம் ஆண்டின் 296 ஆம் எண்ணுள் ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டெழுத்தை திரு. டி. வி. மகாலிங்கம் அவர்கள் --தம்முடைய நூலில் ஆராயாமலும் குறிப்பிடாமலும் விட்டு விட்டார். இதன் காரணம் தெரியவில்லை. ஆனால் திரு. ஐ.