பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VII

அமையாமல் அங்கும் இங்குமாக ஒவ்வோரிடங்களில் குறிக்கப் பட்டுள்ளன. வரலாறு கூறுவது என்பது இந்தப் பழைய இந்நூல்களின் நோக்கம் அன்று. தங்களைப் போற்றிப் புரந்த அரசர் சிற்றரசர் முதலானோரைப் புகழ்ந்து பாடிய செய்யுள்களாக அமைந்துள்ள இந்தப் பழைய நூல்களில் சரித்திர வரலாற்றுச் செய்திகளும் தற்செயலாக இடம் பெற்றிருக்கின்றன. இந்த வரலாற்றுச் செய்திகளைத் தக்க முறையில் ஏனைய செய்திகளுடன் பொருத்தி ஆராய்ந்து, வரலாற்றை அமைக்க வேண்டியது சரித்திரம் எழுதுவோரின் கடமையாகிறது.

கொங்குநாட்டுப் பழைய வரலாறு எழுதுவதற்குப் பெருந்துணையாக இருக்கிற இந்த நூல்களைப் பற்றிச் சிறிது கூறுவோம்.

பதிற்றுப்பத்து :

சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்து, சங்க காலத்துச் சேர அரசர்கள் மேல் பாடப்பட்டது. ஒவ்வொரு அரசன் மேலும் பத்துப்பத்துச் செய்யுளாகப் பத்து அரசர் மேல் பாடப்பட்டபடியால் இது பதிற்றுப்பத்து என்று பெயர் பெற்றது. இப்போது கிடைத்துள்ள பதிற்றுப் பத்தில் முதல் பத்தும் பத்தாம் பத்துங் காணப்படாத படியால் எட்டுப் பத்துக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆகவே பதிற்றுப்பத்தில் எட்டு அரசர்களைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கின்றது.

சேர நாட்டு அரசர்களைப் பற்றிக் கூறுகிற பதிற்றுப் பத்துக்கும் கொங்குநாட்டு வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று கேட்கலாம். இப்போது பெரும்பான்மை யோர் கருதிக் கொண்டிருக்கிறபடி, பதிற்றுப்பத்து சேர நாட்டு வரலாற்றை மட்டுங் கூறவில்லை; கொங்குநாட்டு வரலாற்றையுங் கூறு கிறது. முதல் ஆறுபத்துகள் சேர நாட்டுச் சேர அரசர்களைப் பற்றிக் கூறுகின்றன. அடுத்த நான்கு பத்துகள், கொங்கு நாட்டையாண்ட கொங்குச் சேர அரசர்களைப் பற்றிக் கூறுகின்றன. இந்த உண்மையை இது வரையில் சரித்திரக்காரர்கள் உணரவில்லை.