பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பெயருடன், பாண்டி நாட்டு மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுக்காவில் சேர்ந்திருக்கிறது.

     (மூத்தவழி)(இளையவழி)
சேரநாட்டுச் சேரர்கொங்கு நாட்டுப் பொறையர்
உதியஞ் சேரல் =அந்துவன்பொறையன்=
வேண்மாள் நல்லினி.பொறையன்பெருந்தேவி
   ┌───────┴───────┐
இமயவரம்பன்பல்யானைச்செல்வக் கடுங்கோ
நெடுஞ்சேரலாதன்செல்கெழுகுட்டுவன்வாழியாதன்=
=வேளாவிகோமான்வேளாவிகோமன்
பதுமன் தேவி Iபதுமன் தேவி II

செ.க. வா. ஆதனுக்கும் அவனுடைய அரசியாகிய பதுமன் தேவிக்கும் இரண்டு ஆண் மக்கள் பிறந்தனர் என்று அறிகிறோம்.[1] இவ்விரு புதல்வர்களில் ஒருவன் பெருஞ்சேரல் இரும்பொறை. (பிற்காலத்தில் தகடூரை வென்று புகழ் பெற்றவன். 8ஆம் பத்து பதிகம்). இளைய மகன் பெயர் குட்டுவன் இரும்பொறை என்பது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும், குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று சிவராச பிள்ளை கருதுகிறார். [2] இவர் கருதுவது தவறு, செல்வக் கடுங்கோ வாழி-


  1. வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை, இளந்துணைப்
    புதல்வரின் முதியர்ப் பேணித், தொல்கடன் இறுத்த
    வெல்போர் அண்ணல்.’ 7ஆம் பத்து 10:20-22
  2. (P. 124. The Chronology of early Tamils 1932)