பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 கொய்த மலர்கள் யாகத்தான் நினைக்கத் தோன்றும், இதில் காதற்கிழமை ஒளி விடுகிறது. ஆனால் இக்காதற்கிழமை தலைவன் தலைவியைப் பற்றிய தன்று. ஆதன் ஊங்கன் என்ற சிற்றரசனுக்கும் ஆத்திரையனாருக்கும் இடைப்பட்ட கிழமையாகும் இது. அவர்கள் இருவரும் உள்ளும் புறமும் ஒத்தனர். எனவே புலவர் தம் நெஞ்சைத் திறந்தால் அவனைக் காணமுடியும் என்கிறார். அவர் அத்துடன் நிற்கவில்லை; அதற்குமேலும் செல்லுகிறார். தான் அவனை மறக்க முடியுமா? என்ற வினாவினை எழுப்பிக்கொள்ளு கிறார். அதற்கு அவரே பண்பாட்டின் உச்சியில் நின்று பதிலும் தருகிறார். மறக்க முடியும் என்கிறார். எப்போது? ஆம்! ஒரே ஒரு வேளையிலதான்! தன்னை மறக்க முடியு. மன்றோ! அவ்வாறு தன்னை மறந்து இறக்கும் அதே வேளையில் தன்னினும் வேறாக அல்லாத அவனையும் மறக்கத்தானே வேண்டும். ஆகவே தன் உயிர் பிரியும்தன்னை மறக்கும் அந்த இறுதிக்காலத்திலன்றி, உயிர் வாழும் நாள்வரை ஆதன் ஊங்கனை அவர் எந்தக் கணமும் மறக்கவில்லை. என்வேதான் 'என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவர்' என்று. அவன் தன் அகத்தில் நிறைந்திருப் பதை அவர் காட்டுகின்றார். எனவே அந்தப் புலவர் உள்ளும் புறமும் ஒத்த வாழ்க்கை வாழ்ந்தவர். அதனால் தான் போலும் அவர் இந்த ஆரவார உலகில் எங்கோ ஒரு மூலையில் அமைதியாக இருக்கின்றார்: எனினும் பண்பாட்டில் தலைநின்ற தமிழகம் அத்தகைய பண்பட்ட உள்ளும் புறமும் ஒத்த நல்ல வரை மறந்து விடாது என்பதை நாட்டுக்கு உணர்த்த வேண்டும். இதோ அவர் அடிகளைத் தருகிறேன். • எந்தை வாழி! ஆதனூங்க/ என் நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே!