பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

182 கொய்த மலர்கள் மல் பெறுதல் வேண்டும். அத்துடன் இருக்க இடமும் தேவை. இந்த வாழ்வின் அடிப்படையையும் பிறவற்றை யும் சேர்த்தே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே, என்றார். இந்த அடிப்படைகளை அனை வருக்கும் தேடித் தருவது தான் இன்றைய சமதர்மச் சமுதாயத்தின் அடிப்படை யாகும். நாட்டில் எல்லாச் செல்வங்களும் எல்லாருக்கும் பொருந்த இருக்குமானால் ஏற்றத்தாழ்வு நாட்டில் இருக காது. மாறுபாடு இருக்காது. பொய்யும் பொறாமையும் அதிகமாக வளராது; அன்பும் அமைதியும் வாழும். ஆம். அத்தகைய நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்கமாட்டார் கள் என்கின்றனர் புலவர். கம்பர் கோசல நாட்டை ஒரு தெளிந்த நாடாகக் (Ideal State) காட்ட விழைகின்றார். அந்த நாட்டில் எல்லாருக்கும் எல்லாச் செல்வங்களும் இருந்தனவாம். ஆகவே, பொருளால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றோ பெற்றார் அற்றார் என்றோ வேறுபாடு இல்லை எனக் காட்டு கின்றார். • எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ ' என்கிறார். அவருக்குப் பின்னால் வந்த சிவப்பிரகாசர் தாம் கண்ட கற்பனை நகராகிய வன வசை மாநகரிலும், விளவல தேயத்திலும் ஒரே ஒரு குறைதான் இருந்தது என்றும், அது கொடுக்க நினைத்தாலும் வாங்கிச் செல்ல யாரும் பிச்சைக்காரர் கிடையாக் குறையே என்றும், எனவே அந்த நாடும் நகரும் எல்லாச் செல்வங்களும் பெற்று விளங்கின என்றும் காட்டுகின்றார். ' கொடுப்போர்க்கு இரப்பார் இல்லாத குறையொன் றுளது கூறுங்கால் ' (பிரபுலிங்கலீலை