மாணவர் நல்லவரே 145: மற்ருென்றும் நோக்கவேண்டும். பாடத்திட்டங்கள் மாணவர் வருங்கால வாழ்வுக்குப் பயன்தரத்தக்கதாக அமையவேண்டும். பள்ளிகளில் பாடத்திட்டம் வகுக்கும். முறையை அவ்வத்துறையில் வல்லவர்கள் வழியே ஒப்ப டைத்தல் வேண்டும். அதுபோன்றே தேர்வு முறையிலும். அடிக்கடி மாற்றங்கள் செய்து மாணவரைத் திண்டாட விடாது, அமைதியான ஒரு முறையில் நல்ல அறிவறிந்து. அவ்வத்துறையில் தேர்ச்சிபெற்ற வல்லவர்வழித் தேர்வு: களே நடத்த வேண்டும். மாணவர் பயிலும் கல்வி அவர் தம் வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமேயன்றி 'அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி அதிகமெனக் கற்றுவிட்டோம் அறிவிலாமல் என்று வாடும் வகையில் கல்வி நெறியை அமைக்கலாகாது. இன்று அத்துறையில்: கல்வி இல்லாத காரணம்தான் மாணவர்களே வேற்றுத். துறைக்குச் செல்லத் தூண்டுகிறது. மேலே நாடுகளின் கல்வி நிலையினைக் கண்டுவரும் பலர் அங்குள்ள கல்வி முறைகளுக்கும் இங்குள்ள முறைகளுக்கும் வேறுபாடுகள் உண்டு என்கின்றனர். அதற்காக-அவற்றை ஆக்குவ, தற்காக-அரசாங்கச் செலவில் செல்லும் கல்லன்பர்கள் அத்துறை வழிகளே ஆராய்ந்து அவற்றுள் கல்லனவற்றை நம் நாட்டில் செயலாக்க முயலவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகப் பள்ளியிலும் கல்லூரி யிலும் நல்ல ஒழுக்க நெறி ஒம்பும் வல்லவர்களேயே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். செயலாற்றும் திறனும் செம்மை உளமும் உள்ளவர்கள் முதல்வர்களாக, வும் ஆசிரியர்களாகவும் வருவார்களாயின் அது கல்வித். துறைக்கு நலமாகும். இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். இவற்றைப் பலர் கினைக்கின்றனர். எனினும் வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர். என்ருலும் ஒருநாள் சொல்லித்தானே ஆகவேண்டும். எனவே,
பக்கம்:கொய்த மலர்கள்.pdf/147
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை