பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்றம் ஆய்ந்தது மறுநாள் வழக்கை நடத்திடு வதுமொரு நலமே பயக்கும் ” தீது வருமெனத் தேர்ந்திடற் கில்லை! ஏதுக் கும் நாம் இன்று நிறுத்தி நாளை நடத்துதல் நன்ரும் !’ என்றும் நாளை வழக்கில் நங்கை வள்ளியும் நிறுத்தப் படுதல் வேண்டும்” என்றும் புலவர் ஒருவர் புகன்றிட, மற்றவர்

  • நலமதே’ என்றனர். "நாளே வழக்குத் 請5f} தொடரும்” என்று தெரிவித்தார் ஒருவர் !

நின்ற மக்கள் நிலையை உணர்ந்து சென்றுகொண் டிருந்தனர் : சிங்கனப் புலவர் மறுநாள் அவன்தன் மங்கையோ டங்கு வருமா றுரைத்தார் ; வணக்கம் கூறிச் சிங்கன் பிரிந்திடச் சீறிப் பொங்கிக் குவிந்தது கருப்பனின் உளமே !