பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 82 — என்னும் இந்நிலை ஏன்பொறி வண்டே! புன்னைச் சிட்டே போ! போ! அவனிடம்! வெட்டிய கன்னல் வீழ்ந்தது! வந்து கட்டிக் கொள்ளெனக் கழறுக! காற்றில் துள்ளிய வாறுள தேன்மலர் தன்னைக் ..? [3 கிள்ளிக் கொள்கெனக் கிளத்துக! மாசில் இசையாழ் ஏந்தி இன்தமிழ் பாடி, இசைப்பாய் என்றே இயம்புக! மறுவில் இளமை பொருந்திய ஏந்திழைக் கின்பம் விளேப்பாய் என்றே விளம்புக! - முன்கை ஆர்த்திடும் ஒளிவளை அணிந்தவட் கின்பஞ் சேர்த்திடு கென்றே சிலம்புக! சீர்தரு நெற்றி யணுகிய நெடுங்கண் முகத்தினை ஒற்றி மகிழென உணர்த்துக! சிட்டே! தென்றல் ஊர்ந்தே தெரிவையை அணுகென 40 நன்றே உணர்த்துக! நன்றிசெய் சிட்டே' என்றவள் இசைக்கும் இசையை நிறுத்துமுன், 'நன்று நன்றென நவின்ருர் யாரோ! எங்கோ பறந்தவள் எண்ணம் மீண்டது! தங்கிய இன்பம் தகர்ந்திட வெகுண்டு, "யாரவர்' என்றே யாழ்நரம் பறுந்த வாறவள் கூறிய வன்குரல் அடங்குமுன், வண்டு பறந்திடும் வார்குழல் ஒருத்தி மண்டிய அழகெலாம் மறைப்பது போன்றே, மென்றுகில் உடுத்து, மின்னும் முகத்தொடு 5{} நின்ருள் அவள்முன், நெற்றி சுருங்கி