பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 89 — எழுதுங் கோலெல்லாம் ஈட்டி முனையானல், ஒருநொடியில் அன்னரை ஒழித்துக் கட்டியபின் மறுநொடியில் இந்நாடு மலரவழி செய்திடலாம் 230 வாவா! சிங்கன் வழிபார்த் திருப்பான்! வா!வா! நமக்கொரு வகைசெய் திடலாம்!” என்று மருக்கொழுந் தியம்பிட, வள்ளி, என்றமிழ்ச் சிங்கன் எங்குளர் அம்மா? இயம்புவீ ரென்ருள்; என்வீ டொன்றில், காக்க வைத்துளேன்; கடிதில் புறப்படு; ஏக்கத் தோடவன் இருப்பான்’ என்றிடப் பெரியவர் தம்மைப் பற்றி யுரைத்தாள்; 'அருங்கொடிப் பெண்னே: அவர்வரு முன்னர் சிங்கன அழைத்துத் திரும்புவோம் என்ருள்: &4G பொங்கும் நெஞ்சொடும், புதைந்த நினைவொடும், ஒலைக் கதவினைச் சார்த்திச் . சாலை நெடுவழிச் சேர்ந்தனர் மறைந்தே!