பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 98 — எங்கோ சென்றனர்; இருக்கும் உயிரைத் 80 தங்கச் செய்திடத் தவித்தனர்! என்றன் குடும்பமும் வாடிக் குலைந்ததே! ஐய, இடும்பை தாளா அன்னையும் எந்தையும் வாடி வதங்கினர்; வண்ணப் பாவைபோல் தேடிக் கிடைத்த தளிர்மக வொன்றை ஏந்திய வாறே இடுக்கண் னேந்திய ஆம்பற் கொடியென் அக்கையும் யானும், பெற்றவர் தம்மைப் பிரிந்தவர் பாலே, பொற்ருெடி மகவைப் பேணத் தந்தே ஒரிரு நாட்களில் ஊர்வரு வோமென் 90 நீரிரு நாட்கள் இருவரும் பலவா றலைந்து திரிந்தே அயர்வுறும் நிலையில் சேர்ந்தோம் நீடூர் வயலே!