பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 21 இத்தரை பணத்தைப் பெற்றேர் ஏற்றத்துக் காகும்! ஏழை செத்தழிந் தாகவேண்டும் என்பதை உணர்வா யென்ருர்: என்றவன் இதுவரை யுரைத்தது கேட்டவர் மென்றளி ருடலம் மெய்சிலிர்த் திடவும் என்று காணுவம் என்றிருந் திருந்தே, அன்று கண்டவர் போல்மிக வுவந்தே, பொங்கிய மகிழ்விற் புதைந்தவர், நின்ற சிங்கனின் செருத்தோள் சென்று நோக்கியே சிங்கா சிறுபரு வத்தே யாக்கிளை தங்கிட வேற்ற தழும்பி தென்றனர்! 'அப்பா நீயென தருமை மகனே, எப்பா விருந்தனை யிதுநாள் வரை'யெனச் செப்பா முன்னர்ச் சிங்கனுந் தாவியே அப்பா! அப்பா வென்றணேத் தனனே! இன்னுள் வரையிலா தின்பச் சூழல் தன்னல் நிறைந்த தக்குடில் இருவரும் இன்னே சின்னெடி இணைந்திருந் திடவப் பொன்னேர் மேனியன் புகன்றிடு கின்ருன்; 'முந்தையி லிருந்தநம் மூதூர் விட்டென் தந்தையே இவ்வூர் தான்புகுந் திடவென் வந்தது? வாய்த்த அரும்பெற லன்னேயென் சிந்தை யுணர்ந்த சீரெங் கேயோ?