பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سطح سد سی بی سی மேல் ஊன்றியவராய், சுருட்டை மாறி மாறிப்புகைத் தவராய்,மூன்று மணிநேரம் ஈடுபட்டு அதனைப்படித்து முடித்தார். இறுதியில், இங்கொன்றும் அங்கொன்று மாக, அதைத் திருத்தி, "இந்தாப்பா, இதையெடுத் துக் கொண்டு போய்ப் போட்டிக்கென்று விடுத்து விடு' என்று கூறினர். அத்துடன், மூன்று மணி நேரம் ஆடாமல், அசையாமல், இடைவிடாமல் முழங் கையை ஊன்றிப் படித்த வருத்தம் வெளிப்படுமாறு, கையெல்லாம் வலிக்குதப்பா'என்றுகையை உதறிக் கொண்டே கூறினர். அந்த அருங்காட்சி இன்ன மும் என் உள்ளத்தில் பசுமையாக நிழலாடிக் கொண்டிருக்கிறது. பிறகு, ஏதோ ஒரு காரணத்தால், போட்டிக்குப் பாவேந்தர் தலைமை தவிர்க்கப் பட்டதாக அவர்க்குத் தெரிய வந்தது. அக்கால் அவர் என்னே யழைத்து, போட்டிக்கு நீ உன் நூலே அனுப்ப வேண்டாம்; திருட்டுப் பயலுக என்னைத் தலைமையினின்று நீக்கி விட்டானுங்க! உன் நூலே வேறு யா ரி ட மும் தேர்வுக்கு அனுப்ப வேண்டாம். நான் அதை நம் அச்சகத்திலேயே அச்சுப் போட்டு விடச் சொல் கிறேன்’ என்று கூறிவிட்டுத் தம் மகன் திரு. மன்னர் மன்னனைக் கூப்பிட்டு, தம்பி, இதை நம் அச்சகத்திலேயே அச்சுப் போட்டுக் கொடுத்துவிடு: என்று கட்டளையிட்டார். திரு. மன்னர் மன்னன் அக்கால் என்மேல் அன்பும் பரிவும் கொண்டிருந்தவர். அவர் உடனே, அதனை அச்சேற்றினர். அஃது, அச்சாகி முடியுந் தறுவாயிலிருந்த பொழுது, ஒருநாள் மாலே நான்