பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கடற்படு முத்தைக் கோத்தியல் வாயாய்! இடர்ப்படு வேன்நான் எனினும் உன்னை, இழந்திட ஒவ்வேன்; எனக்குனே யாக்கிட அழிந்த கண்ணையன் அழியா திருந்தால், அவனைக் கொண்டுன் அணிகா தலனே அழித்திருப் பேனே! அதன்பின் கண்ணேயன் 398 ஒழிந்திட வேண்டும், உனேநா னடைய! இந்த முடிவே என்முடி வாகிட, வந்த முடிவோ வேருய்ப் போனது, பின்னர் இறப்பவன் முன்னர் இறந்தான்! முன்னர் இ றப்பவன் பின்னர் இறப்பான்! அன்றே வைத்த அக்குறி மாறிக் கொன்றதே அவனை குயில் மொழி:இனுங்கேள்: சிங்கன் இருக்கையில் சிக்கலாய் அன்பினை எங்ஙன் செலுத்துவ தென்றும் எண்ணலாம்! அங்ங்ன் ஆயினும் அச்சந் தவிர்க்க! 2 i G பொங்கும் அன்பொடு பொன்னுடல் என்கைப் புதைக்க நாளையே புல்லறி வாளனக் சிதைக்கின் றேனெனச் செப்பியே, வள்ளியை அணைக்க வெண்ணி அணிப்பூம் பாவையே! பிணைக்க வருவாய் பேடை யன்னமே! என்று பேசி இருங்குழற் கோதையை, அண்டினன் அக்கால் யாரோ கதவினத் தளிர்க்கொடி நெஞ்சுபோல் தட்டி முழக்கினர். குளிர்மிக வேந்திய குருவியைப் போலவன் குறுகிக் குமைந்தனன்; கோதையோ 名罗莓 அருகி லோடியத் தாழ்திறந் தாளே! — O –