பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

أ. . . . فأة رقيق هوي 0 வெண்பா, அகவற்பா, ஆசிரிய விருத்தம், இசைப்பாட்டு எனும் நால்வகைப் பாக்கள் விரவிவரக் கோத்த கவிதைப் பனுவல் இது...... சிறுகதைப் பொருளை ஒரு காவியமாக விரிக்க முயன்று, ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளார், இதன் ஆசிரியர். 'கண் வைத்தீர்......... துடிக்க வைத்தீர்’ என்பது போன்ற பாடல்கள், ஆசிரியரின் கவிதைத் திறனுக்கும், கற்பனை நயத்துக்கும் ஏற்ற சான்றுகளாம். இக்காலத்துப் பெரிதும் விரும்பப்படும் எளிய, இனிய செய்யுள் நடை ..... விருத்தப்பாக்களின் அமைப்பு இயற்கைச் சிறப்புடன் மிளிர் கின்றது..... - 'ஏழையாய்ப் பிறந்தோ ரெல்லாம் இடரின்றி வாழ்தற் கில்லை; ஏழையாய்ப் பிறந்தோர்க் கெல்லாம் இடர்தராச் செல்வர் இல்லை!" வாழையாய் எண்ணி யினும் அருங்கணி பெற்றுப் பின்னைப் பிழைசெய் உலகு செய்யும் பிழையினை ஒறுத்தல் யாரோ?” "கல்லி யெடுத்துக் கள்ளியை அகற்றி முல்லை ஊன்றின் முளையாதோ?” - என்று வரும் இடங்களில் ஆசிரியரின் சீர் தி ரு த் த க் கருத்துகள் தெளிவாயுள்ளன. தொத்திவரும் கிளிதன்னைப் போபோ என்று தொங்குகின்ற பழக்குலைதான் கூறலுண்டோ? "புன்னையில் உள்ள சிட்டு, போகாது தென்னைக் கென்ருள்' என்பதும், -