பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 44 — கட்டிக் கரும்பெனும் கன்னியரோடே, 'இருந்தின் ருகிலும் என்னுடன் மகிழ்ந்தே ஒருசொல் பேசுவீ ரென்னும் பெண்ணின் குவளைக் கண்களைக் கண்ணிர் மறைக்க ஏக்கம் வந்தவ் வேந்திழை நெஞ்சைத் தாக்கிட விட்டுத் தொழிலினை ஏற்கும் இரும்பு நொறுங்கினும் எலும்பு நொறுங்கா மறம்புனை தோளின் மழவாக ளெல்லாம் 9驶 உழைத்திடு கின்ருர்! உம்மில் பலபேர், மழையெனக் கண்ணிர் உகுத்திட லேனே? உறுத்திடு வெயிலில் உழைத்துழைத் தேயவர் கறுத்த மேனி கழறுவ தென்ன? மேனுட் டாரின் மிகுந்த பொருள்கள் அத்துணை யாலும் ஆகுவ தென்ன? இசையும் அதனை எழுப்பும் தட்டும் அசையும் அலையினே அனைத்துப் பாடிடும், ஒலிசெய் கருவியும் உருவம் திரையினில் நெளிந்து பேசி நிகழ்த்தும் காட்சியும் 烈{}{》 யாவர்க் குதவும்? யாவர்க் குதவும்? பணமுள் ளவரப் பொருள்தமை வாங்கிப் பணத்தைச் சேர்க்கும் பாதையை அமைப்பர்! ஏழையர்க் கவற்ரு லாகுவ தென்ன? ஆழ்ந்த பசியினை அடைத்திடும் புதுப்பொருள் எவையெவை கண்டார்? எந்தமிழ் நாட்டீர்! விண்ணே முட்டிய வீடுகள் அமைத்தே கண்ணுெளி குன்றிக் காதை யடைத்திடும் பசியுடை யோர்கள் படுத்துப் புரள்வதால் -- பசிபறந் திடுமா? பலபல நிறமும் { { {j . அணிபெறும் புனலும், ஆகும் விளைச்சலும் -