பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 57 — 'கண்ணே இராப்போதில் கண்துஞ்ச வில்லாதுன் எண்ணத்தாற் காய்கின்றேன்’ என்ருனுக்-கெண்ணித் துடித்தவா றுள்ளேன் தெவிட்டாத இன்பம் வடித்தீவி', ரென்ருள், வரைந்து!" 'முல்லைச் சிரிப்பும் நிலவின் குளிர்முகமும் தொல்லை விளக்கு'தென் முன்,அவளும்-இல்லேயே குன்றுநிகர் தோளும் குளிர்செய்யும் நெஞ் சுந்தான் நின்றுறுத்தும் என்ருள் நொடித்து! 态 (வேறுi இன்னே இன்னே இருவரும் தம்முள் சொன்னதை யெல்லாம் செவிமடுத் தானக் கண்ணையன்; மீண்டும் கழறிஞன் சிங்கன்: புன்னை யிலையின் பொருந்திய சீரடித் தண்டை யொலித்திட நன்னடை பயின்றே அன்று பேசிய அருவியின் பக்கம் இன்றிரா வருக ஏந்திழை யுனக்காக் காத்திருப்பேன்’ எனக், கன்னியும் மகிழ்ந்து, “காவா திருந்திடக் கடிதில் வருவேன்’ என்றே யியம்பிட எழிலிடைப் பெண்ணைச் 10 சிட்டு பிணையினைச் சிலநொடி கொஞ்சி விட்டுப் பிரிந்த வகையிற் பிரிந்திட, கண்ணையன் இவர்கள் காணு வண்ணம் அங்கிருந் தரைநொடி ஆகுவ தற்குள் சென்றனன்! சென்றபின் சேயிழை, சிங்கன் சொன்ன சொற்களைச் சொல்லி மகிழ்ந்தனள்! "இரவு வருவாய் என்றவன் கூறிய . . . - - நறவு தோய்த்த நற்சொல் ஒருமுறை. சொல்லிப் பார்த்தாள் சொன்னதும் நாணம் அள்ளி விழுங்கிட, அதனை மறந்தாள் 20