இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உணவை மிக வேகமாக முடித்துக்கொண்டு அவன் தன் ஆள்களைப் பார்த்து, "ஏரிக்கரையிலே சங்கம் புதர்ப்பகுதிக்கு உடனே புறப்படுங்கள். கையிலே சிலம்பத் தடியை ஒவ்வொரு வரும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டான்.
தச்சு வேலை செய்த பதினைந்து பேரும் கையில்தடியோடு புறப்பட்டார்கள். எதற்காகத் தடி என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், யாரும் அதுபற்றி அவனிடம் கேட்கத் துணியவில்லை. அவனிடத்திலே அவ்வளவு பயம். குள்ளனும் ஒரு தடியை எடுத்தவண்ணம் புறப்பட்டான். அவன் போக நினைத்த இடத்திலிருந்து ஏரிவழியாக வருபவர்களையும் பார்க்கலாம். ஆற்றின் வழியாக வருபவர்களையும் பார்க்கலாம். தனது கைத்துப்பாக்கியை இனிப் பயன்படுத்த வேண்டி நேரிடும் என்று அவனுக்குத் தோன்றியது. அதை எடுத்துக் கொண்டான். தனது உயிருக்கே ஆபத்து வரும்போது கொலை செய்யவும் அவன் தயாராக இருந்தான்.