பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

________________

36 தேவைப்பட்டால் பிரிந்து போவோம் - இது கோளாம். விளக்கங்கள் தொடரக்கூடும். ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை! குறிக் பிரிவினை உரிமையை ஒப்புக்கொள்ள. சட்டத்திலேமே. அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க இந்திய சர்க்கார் இசையுமானால். பிரிவினையையே ஒப்புக் கொள்ளமே! எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமை யையும் கொடுத்துவிட்டு. கூட்டு வாழ்க்கையையும் நடத்து இந்தியத் துரைத்தனருகில் உள்ளவர்கள் என்ன ஏமாளி களா? அரசியல் அறியாத அப்பாவிகளா! புரியவில்லை. போகட்டும், தமிழ்நடு பாரத்த்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து கட்டும். இனி, மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி/ இது கலைஞர்களைப் பற்றியது ! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத் தின் போக்கு, இதிலே ! அந்தக் கரப்புக்கு மருந்து பிரிவினை! திராவிட. இனமக்களின் வாழ்க்கையிலே ஒரே காப்பு- இருந்தும் அவர்க ளுக்கும் 'பிரிவினை' உடனடியாக வேண் டாம் - பிரிந்துபோகும் உரிமை மட்டும் இருந்தால் போது மாம். ஆறால்,கலைஞர்கள் கழகத்தில் இருப்பதால், ஏற் படும் விளைவுகள் மெத்தக்கசப்பாக இருப்பதால், கழகத்தை விட்டு இவர் போகிறார்.என்ன நியாயமோ ! ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி, கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்கவேண்டும், எப்படி அது பக்குவப்படுத்தப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லிக், கழகத்தைச் செம்மைப்படுத்தி யிருக்கக்கூடாது? இருக்கட்டும் - யார்