பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

________________

தம்பி! கூத்தாடிகள் கூவிக்கிடப்போர் அடுக்குமொழியினர் ஆபாச நடையினர் பணம் தேடிகள் பதவிப்பித்தர்கள் காமச்சுவைப் பேச்சினர் கதை எழுதிப் பிழைப்போர் அன்னக்காவடிகள் ஆடி அலைபவர்கள். இவை, 'குரு' எனக்காகக் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள்- அவரைவிட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்டபோது. கலம். காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூ வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும். இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக்கொண்டு. பொடியன் காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித் தான். படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி - அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்குமேற்குத் தெரியாத ஏமாளிகளும்தான் வேறு வேறு கட்சிகளில், என்று நாம் கூறிக் கொண்டிருந்தோம் - எக்களித்துக் கிடந்தோம்; பல் போனதுகள் - பட்டம் இழந்ததுகள் -சரிகைக்குல்லாய் கள்- சலாமிட்டு வாழ்ந்ததுகள் - ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர்-இளைஞர்கள்- இளித்துக்