பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

________________

4 55 தெரிந்தும் பேசாமல் இருக்கின்றனர் மது அமைச்சர்கள். இவர்கள் எட்டு பேர் அந்தஸ்து உயர்ந்தால் போதுமா? வாழ்வும் இல்லை -மதிப்பும் இல்லை - எனவே, என் வெறும் சோற்றுப் பிண்டங்களாக நாம் வாழவேண்டும்? 1(()-க்கு 99 பேர் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் நான் நம்மவர்கள் இருக்கிறர்கள். இப்படி உழைக்கின்ற உழைப்பு நமக்குப் பயன்பட வேண்டும். அதற்குத் திரா விடநாடு திராவிடருக்க வேண்டும். 17-1-60 உதகைப் பேச்சு. தம்பி! 19-1-61-ல் அவருடைய அந்தப் பேச்சு உதவாப் பேச்சு ஆகிவிட்ட தி நல்லவேளையாக நமக்கு அல்ல - அவருக்கு. ஏழ்மை காரண மாக குழந்தையை வளர்க்க முடியாமல் விட்டு விடும் தாய் நிலை போலும்! நாமும் ஏழைகள் தாம். என்றும் கன்னத் தில் குழி விழுந்தபடி, பிஞ்சுக் கரத்தை நீட்டுகிறதே குழந்தை! எடுத்து வளர்ப்போம் - இரக்கம் இருக்கிறது- இதயம் இருக்கிறதே! எனவேதான் இன்று புதுக் கட்சி தேவைப்படுவதால் எந்தெந்தக்கருத்துக் குழவிகளை,காட்டி லும்,மேட்டிலும் போட்டு விட்டுப் பெற்றவர் போய் விட் டாலும்,நாம் எடுத்துப் பாராட்டி வருகிறோம். "வடக்கே வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறார்கள் - தெற்கே வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்துகிறார்கள்!வடக்கே வளமான தொழிற்சாலைகள் உருவாக்குகிறார்கள்- தெற்கே உருவாகும் நிலை இருந்தும் உதாசீனம் செய்கின்றார்கள் ! எனவே, திராவிட முன்னேற்றகக் கழகம், தெற்கே உள்ள மாநிலங்கள் நான்கும் தனி உரிமை பெற்று, திராவிடநாடு என இயங்க வேண்டும் என்கிறது. இதற்குத் தமிழகத்தில் ஆதரவு பெருகி விட்டது; மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகின்றன - நம்முடைய முயற்சிகள் இல்லாமலேயே அங் கெல்லாம் இன்று கழகம் வளர்ந்து வருகிறது.