பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

________________

58 நம்பிக்கையும் இரண்டே ஆண்டுகளில் உருக்கிப் போர் வீடும், உருத் தெரியாமல் போய்விடும் என்று எந்தக் கார் கிரஸ்காரராவது கேலிக்காகச் சொல்லி இருந்தால் கோபம் கொப்பளிக்கும் நிலை பெற்று, "ஏடா! மூடா! இந்தப் பேச்சுக் கேட்ட பிறகுமா உனக்குக் கெடுமதி? பேசினவ ரின் வார்த்தைகளில் வெளிப்பட்ட. வீராவேசத்தைச் கவனித்தனையோ? இவர் போன்றார், களத்திலே நிற்போர். கிலிகொண்டு கடுகி ஓடிவிடினும், தன்னந்த தனியாக நின்றே. னும், இலட்சிய வெற்றிக்கு உழைக்கும் தன்மையினர் என்பதை உணருகிறாயா? இப்படிப்பட்டவர்கள் ஊட்டும் எழுச்சியா உலர்ந்து போகும்! என்னே உன் அறிவீனம்!"- என்று கடிந்துரைத்திடும் நிலையினராயினர். நல்ல புடம் போட்டெடுத்த அரிய வீரர்கள்.கூர் ஏறிய ஒளிவிடும் சாதனங்கள். இரண்டே ஆண்டுகளிலா இடுப் பொடிந்தோர் ஆகிவிட்டனர்/நம்பமுடியுமா? ஆநாரம் காட்ட இயலுமா?கூர் மழுங்கியா விட்டது? ஒளி மங்கியா போய் விட்டது? பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியும், இந்தியை எதிர்க்கத் திரண்டு நின்ற எழுச்சியும், கூர் மழுங்கியதையா காட்டுகிறது!! பேதையும் கொள்ளனே அப்படி ஒரு எண்ணத்தை? பின்னர் ஏன் புரக் கட்சிதேடினோர். தி.மு.கழகம் பயனற்றுப் போய் விட்டது என்று கூறுகின்றனர்? ஏன்? அதிலென்ன செய்யலாம். மழை காலத்தில் காளான் முளைக்கிறது! பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெரிது மாகிறது! ஆனால். நிலைத்து நிற்கமுடிகிறதோ? அது போலத்தான் இந்தத் தி.மு.க.! திடீரென்று முளைத்திருக் கிறது - வெகு விரைவிலே, இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடப் போகிறது- என்று மாற்றார்கள் பேசினர். மார் தட்டிக் கொண்டு பேசினார், இன்று தி.மு.கழகம்