பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

________________

68 கள்! நவ இந்தியாவும் அகில இந்தியாவை ஆதரிக்கும் ஏடு களும் கங்காணிகள்! எவரெவர், இங்கு இருந்துகொண்டு. அகில இந்தியா பேசுகிறார்களோ, அவர்கள் துரோகிகள்- கங்காணிகள். நீயும் நானும் இல்லை! அந்தப் பட்டியலில். பெரியார் இராமசாமி இல்லை, அந்தப் பட்டியலில் ஆதித்த னார் இல்லை அந்தப் பட்டியலில்! ஆனால், வெட்டிக் கொண்டு செல்லும் உரிமையைப் பெற்றுக் கொண்டு, அகில இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கொள்கையினர்? எனக்குக் கூச்சமாக இருக்கிறது தம்பி! சொல்ல ! ஆனால், காரணம் காட்டாமல் கண்மூடித் தனமான, கற்பனையாக, வடக்கு-தெற்கு என்று, அவர் பேசிக்கொண் டிருந்தாரா? இல்லை! அழகழகான ஆதாரங்களுடன்! இன்று அவருக்கு அவை பிடிக்கவில்லையாம்! ஆனால், படித் துப் பார்க்கச் சொல், எவரையும், பல நாட்கள் ஏடுகளில் உள்ளது பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துக். தெளிவு பெற்றுத் துணிவு பெற்றுப் பேசி யிருக்கிறார் என்பது தெரியும். அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்ததுபோல் அல்ல. தென்னகத்துக்கென ஓர் தனிப் பண்பாடு இன்னும் இருந்து வருகிறது. இந்தத் தனிப் பண்பை எல்லாத்துறை களிலும் காணமுடிகிறது. கோயில் சிற்பங்களை எடுத்துக் கொண்டால். தமிழ் நாட்டிலுள்ள அதே பிரியக் கோயில் அமைப்பு முறையை ஆந்திரத்திலும் காணலாம்-கருநாடகத் திலும் காணலாம் - கேரளத்திலும் காணலாம்; இந்த நான்கு மாநிலங்களிலும் ஒரே வகையான பூட்டிட அமைப் பினைக் காணலாம். இதற்கு, திராவிடக் கட்டிடக்கலை' என்று இன்றும் வழங்கி வருகிறது." "இன்று தமிழகத்தில் வளர்த்துள்ள அபோல் ஆந்திரத் தில் தி.மு.இவைகள் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த