பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

________________

74 களைத் தோழர் சம்பத். என்ன கூறி அழைத்திருக்கிறார். தெரியுமா, தம்பி. நம்மை விட்டு விலகியதும் அப்பாவி என்கிறார்கள்.ஆபாச நடையுடையோன் என்கிறார்கள் அனு கேட்டு. நீ ஆயாசமடைகிறாய். காமராசர் போன் றோரும், அவர் கட்டுஏடுகளும், பூரித்துப் போகின்றன. ஆனால் அந்த அகில இந்தியாக்களை அவர் என்ன பெயரிட்டு அழைத்திருக்கிறார், தெரியுமா? அகப்பட்டதைச் சுருட்டு பவன்! ஆமாம், தம்பி! அது ஆனானப்பட்ட காமராச ராகட்டும், அகிலம் சுற்ற ஆரம்பித்திருக்கும் கனம் சுப்பிர மணியமாகட்டும். இதுதான் தோழர் சம்பத் அவர்கள் தரும் சிறப்புப் படம்! இப்போது, அப்போது அப்படி எல்லாம் பெசியது 'பாதகம் - பொறுத்தருள்வீர் என்றுகூடப் பேசக்கூடும். ஆனால், அதைக் கேட்பவர்கள் இப்போது பேசுவதற்கு மீண்டும் எப்பொழுது, பொறுத்திடுக! கூறுவாரோ, என்று தான் வியந்து பேசுவர். பன்னிரண்டு ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு வந்தது பாதகம்என்று இன்று அவருக்குப் புரிகிறது போலும்! இப்போது பேசுவதும், அதேரகமாக இருக்காது என்பதற்கு என்ன உறுதி, இருக்க முடியும் ? இப் போதுபேசுவதை எப்போதுமறுப்பாரோ, யாரறிவார்? இவர் எதைப்போலும், அது எப்போதேனும் இவராலேயே மறுக் க.பட்டுவிடக்கூடுமே என்ற பயத்தோடு அல்லவா இருந்து தொலைக்க வேண்டும். அப்படிப்பட்ட பேச்சை எப்படி நம்பிக் கொண்டிருப்பது? இப்போது, எப்படி திராவிட நாடு கனவு என்று பேசுகிறாரோ, அதுபோல, இப்போது பேசும் தேசீயம்' ஒரு பித்தலாட்டம் என்பதை உணர்ந்து கொண்டேன்! இது வரையில் உங்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றதற்காக மன்னித்திடுக! என்று கூறு வாரோ? நாம்.இவர் 3பச்சை, நம்பிக்கையுடன் கேட்பதே.