பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

________________

75 ஆபத்து -என்றல்லவா மக்கள் படும்! கருதுவர் - திகில் ஏற் தம்பி! இவர் அகில இந்தியா பேசுவோரிடம் உள்ள திகிலைப் பற்றியும் பேசுகிறார். "தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று பேசுபவன், அகப்பட்டதைச் சுருட்டுபவனே தவிர, அரசியல் தீர்க்க தரிசி அல்ல. "சர்க்கஸ் கம்பெனியில் கம்பத்தின் உச்சியில் ஏறி வித்தைகள் செய்யவன், எந்த நிமிடத்தில் கீழே விழு வோமோ என்று அஞ்சிக் கொண்டே இருப்பது போல அகில இந்தியா என்று உதட்டளவில் பேசிக் கொண்டிருந் தாலும், அத்தனை பேர் மனதிலும் ஒரு திகில் - எந்த நேரத் தில் எந்தப் பிரச்னையில் இந்தியா உடையுமோ என்ற திகில் இருந்து கொண்டே இருக்கிறது." தம்பி! இவை பூவிருந்தவல்லியில் 1959, செப்டம்பர் 11.12 நாட்களில் மாநாட்டிலே பேசப்பட்ட மணி மொழி கள்! இப்போது இவை யாவும் குப்பை, கூளம் என்று தள்ளிவிடச் சொல்கிறார்! அந்த மாநாட்டிலேதான், இங்கு என்னை ஏசும் அதே விறுவிறுப்புடன், அமைச்சர்களுக்கு அர்ச்சனை நடந்தது. இங்குள்ள பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் டெல்லியிலே வந்து கர்ணம் போடுகிறார்கள். 'சில இளிச்சவாயர்கள் கையில் 8 கோடி பேர்கள் திராவிடர்கள், மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சிலர் டெல்லியிலிருந்து கட்டியாளுகிறார்கள். அவர்களிட மிருந்து நாம் விடு பட்டாக வேண்டும்.இவ்வளவு திட்ட வட்டமாகப் பேசினார் - பேசினால் என்ன? இப்போது லேபில் மாத்திக் கொண்டார், அது அவருடைய விருப்பம்