பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

________________

90 பிரிவைத் தவிர வேறு மருந்து இல்லை என்பார். ஆமாம்! என்று கூறவேண்டும். திடீரென்று, பிரிவினைக்கு உரிமை மட்டும் இருந்தால் போதும் என்பார்-அப்படியா? அதுவும் சரிதான் ! என்று நாம் பின்பற்ற வேண்டும். சமதர்மம் தழைத்தோங்க வேண்டும் என்பார்-சந் தோஷம் என்று கூற வேண்டும். திடீரென்று சமதர்மம் போன்ற தத்துவச் சிக்கல்களை நாம் கவனிக்கத் தேவை இல்லை. நமக்குத் தொழிலில் வளர வேண்டும், சமதர்மம் அல்ல!- என்பார்! ஆஹா! இது அல்லவா சரியான திட்டம் என்று கூறி அவர் காட்டும் வழி நடக்க வேண்டும். கலைத் தொடர்பு கழகத்துக்கு நல்லது என்பார். நாடகம் ஆடலாம் என்பார்! ஆகட்டும் என்று ஆட வேண்டும். சே! கலைத் தொடர்பு இருக்கலாமா! அது கழகத்தைக் கெடுத்து விடும் என்று கட்டளை யிடுவார்! கீழ்ப்படிய வேண்டும்!! அண்ணா என்றால் என்னவென்று எண்ணிக் கொண் டீர்கள்? அவர் ஒரு தனி ஆள் அல்ல ! ஒரு ஸ்தாபனம் என்பார்! மகிழ வேண்டும். பிறகு அண்ணா என்ன அண்ணா: அண்ணாத்துரை என்று சொல்வோம்.- பூஜா மனோபாவம் வேண்டாம்-கூடாது என்பார் - உடனே டேய்! அண்ணாத்துரை! வரையில், அனைவரும் பேச முற்பட வேண்டும். அண்ணா நடையே புதுமை என்பார். பூரிக்க வேண்டும். சே! என்ன ஆபாசமான நடை! பால் வைத்து எழுதுகிறார்களே. 3சுகிறார்களே. என்பார்; பயப்பட வேண்டும்; நடையைக் காட்டி, நற்சான்று பெற முயல் வேண்டும், சட்டசபையில் தி.மு.க.சாதனைகள் பாரீர் என்பார். மகிழ வேண்டும்; சேச்சே! அக்கறையே- இல்லையே! திற மையே- இல்லையே! என்பார். அழவேண்டும் - பாடம் கேட்க வேண்டும்!